மதுரை விமான நிலையம் வந்த விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்காகவும், விரிவாக்கத்தின் ஒரு பகுதியான 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வான் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய ஏடிசி கட்டடத்தை திறப்பதற்காகவும் டெல்லியில் இருந்து விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மதுரை வந்தார்.
அவருக்கு கரகாட்டம், மயிலாட்டம் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
















