உத்தரப்பிரதேசத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன், நாயை போன்றே குரைத்த சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது.
ஜோகிபூர்வா கிராமத்தை சேர்ந்த கரண் எனும் சிறுவனை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்தது. நாய் கடித்தால் சரியான கால இடைவெளிகளில் மொத்தம் 4 முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், கரண் 2 முறை மட்டுமே செலுத்திக் கொண்டார்.
இதனால் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவன் கரண், தண்ணீரை பார்த்து பயந்ததுடன் நாயை போலவே குரைக்கத் தொடங்கினார்.
அவரை குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ரேபிஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிர் வாழும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
















