மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டமாகவும், ஏப்ரல் 29ம் தேதி 2வது கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7ம் தேதியும் வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 9ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கு வரும் 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 10ஆம் தேதியும் வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 13ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
















