எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பிப்ரவரி 3ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசினர். இதன்காரணமாக காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன் உட்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கோரியதை அடுத்து மக்களவையில் இன்று 8 எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஓம் பிர்லா முன்மொழிந்தார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
















