வடகொரிய நாடாளுமன்றத் தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய நாடாளுமன்றத்திற்கு கடந்த 15-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 99 புள்ளி ஒன்பது மூன்று சதவீத வாக்குகள் பெற்று, தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் 99 புள்ளி ஒன்பது ஒன்பது சதவீத வாக்குகள் பதிவானதாகவும், இதில் சிலர் வெளிநாடுகள் மற்றும் கடல் பகுதியில் பணியாற்றியதால் வாக்களிக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சொற்ப எண்ணிக்கையில் சிலர் வாக்களிக்காமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
















