மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சியை அமெரிக்கா முறியடித்துள்ளது.
‘ஈரானுக்குச் சொந்தமான 44 கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் உட்பட ஏராளமான கப்பல்களை தங்களுடைய ராணுவம் தாக்கி அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி தாக்குதல் தொடரும் என்றும், போர் எப்போது முடியும் என்பது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் தான் இறுதி முடிவு எடுப்பார் என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
















