‘மேற்காசியப் போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், 497 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சரக்கு போக்குவரத்துச் செலவு மற்றும் காப்பீட்டு பிரீமியம் உயர்வால் தேங்கிக் கிடக்கும் ஏற்றுமதிப் பொருட்களுக்குத் தீர்வாக இந்தத் திட்டம் அமையும்.
இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் மற்றும் அந்த நாடுகள் வழியாகச் செல்லும் பொருட்களுக்கு இதன் மூலம் காப்பீடு வழங்கப்பட உள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ECGC நிறுவனம் இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.இதன்மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்ட மற்றும் இனி அனுப்பப்பட உள்ள சரக்குகளுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
















