சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்கு இந்தியாவில் உள்ள முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் 2026 அறிக்கை, உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்திய உளவுத்துறை மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு தடை விதிக்கக் கோரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையை இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அதனை நிராகரித்தும் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
25 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 119 ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் 131 முன்னாள் படை வீரர்கள் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
















