ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நெருங்கி வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனம் வாங்க முன்வந்த நிலையில், அதனை அணிநிர்வாகம் நிராகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் என்ன தற்போது பார்க்கலாம்…
ஐபிஎல்லின் 10 அணிகளில் ஒன்றான, நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணிகளை விற்பதாக அறிவித்தன..
19வது ஐபிஎல் தொடர் மார்ச் 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 16 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான CPCP முன்வந்தது… இரண்டு வார காலத்திற்குள் 16 ஆயிரம் கோடி ரூபாயையும் செலுத்துவதாகவும் உறுதியளித்திருந்தது.
. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ அந்த சலுகையை திடீரென நிராகரித்துவிட்டது… தங்கள் அணியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அணியின் பங்குகள் பரந்த அளவிலான சந்தை மதிப்பை பெற்று வரும் நிலையில், அணி நிர்வாகம் உயர் மதிப்பீட்டை பெறுவதற்கான தெளிவான நோக்கத்தை கொண்டிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிராகரிப்பு முடிவானது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிக மதிப்புள்ள அணிகளின் வரிசையில் சேர்த்திருப்பதோடு, சந்தையின் எதிர்பார்ப்புகளையும் மாற்றியமைத்துள்ளது.
65% பங்குகளைக் கொண்டுள்ள மனோஜ் படாலேயின் எமர்ஜிங் மீடியா வென்ச்சர்ஸ் மற்றும் ரெட் பேர்ட் கேப்பிட்டல் போன்ற சிறு முதலீட்டாளர்களால் வழிநடத்தப்படும் இந்த அணி, ஒரு பிரீமியம் சலுகைக்காகக் காத்திருக்கத் தயாராக உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முடிவு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஏலத்தொகையையும் உயர்த்தியுள்ளதாகவே நம்பப்படுகிறது. சந்தை மதிப்பீடுகளின்படி, ஆர்சிபியின் வலுவான பிராண்ட், வணிக ரீதியிலான ஈர்ப்பு ஆகியவற்றை கணக்கில் கொள்ளும்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வட 15 சதவிகிதம் கூடுதல் தொகையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிபால் மருத்துவமனைகளின் நிறுவனர் டாக்டர் ரஞ்சன் பாய் தலைமையிலான கூட்டமைப்பு, அமெரிக்கபங்கு நிறுவனமான கேகேஆர் மற்றும் சிங்கப்பூரின் டெமாசெக் ஆகியவற்றுடன் இணைந்து, ஆர்.சி.பி-யில் பங்குகளைக் கையகப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் உலகின் இரண்டாவது அதிக மதிப்புள்ள விளையாட்டு லீக்காகத் திகழ்கிறது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே நிலைமையை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஒரு கணிசமான ஏலத்தை நிராகரித்ததன் மூலம், தங்களின் மதிப்பீட்டு வரம்பை உயர்த்தியது மட்டுமல்லாமல், இணை ஒப்பந்தங்களின் போக்கையும், குறிப்பாக ஆர்.சி.பி.யின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















