கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில், பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிகழ்வு, விடிய விடிய நடைபெற்றது.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில், பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை தொடங்கிய தூக்க நேர்ச்சை, இன்று அதிகாலையில் முடிவடைந்தது.
குழந்தை இல்லாத தம்பதியர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் தூக்க நேர்ச்சை வழிபாடு நடத்தினர்.
மேலும், குழந்தைகள் உடல்நலத்துடன் வாழ வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
















