தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது, “ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை,கிள்ளியூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகள் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அவர் கூறினார்.
இதேபோல் என்டிஏ கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
















