சென்னை மதுரவாயலில், “marine engineer”-ஐ எரித்து கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரவாயலை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு கடன் பிரச்னை காரணமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கார்மேகம், பூபாலன், கோகுல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி, கோகுலை தவிர மற்ற அனைவரும் குற்றவாளிகள் எனவும் கொலையாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.
















