திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாமுண்டிபுரம் அருகே தாய் மூகாம்பிகை நகரில், சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
அப்போது 200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் வீட்டு சிலிண்டர்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















