ஸ்ரீராமபிரான் அவதரித்த தினமான ராம நவமி விழாவை முன்னிட்டு அயோத்தியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு வருகை தந்த பக்தர்கள், சரயு நதியில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
ராம நவமியை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பால ராமரை வழிபட்டனர்.
சிறப்பம்சமாக, பால ராமரின் நெற்றியில் சூரியக் கதிர் திலகமாக விழுந்த அற்புத நிகழ்வு நடைபெற்றது.
















