விழுப்புரம் அருகே கடற்கரையில் கஞ்சா புகைத்ததை தட்டிக்கேட்ட 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட பதைபதைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
கோட்டக்குப்பம் கடற்கரையில் நள்ளிரவில் சிலர் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர். இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த போதையில் இருந்த நபர்கள், 4 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர்.
இதனை கண்டித்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டனர்.
இதனிடையே சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
















