திமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அறிவாலயத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது.
இந்த கட்சிகள் திமுக சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் தேமுதிக கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுபெறாமல் உள்ளது. இவ்விரு கட்சிகளும் திமுக-வுடன் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















