ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் - சிறப்பு தொகுப்பு!
May 12, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 27, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயண செலவுகளும், அபாயங்களும் அதிகரித்துள்ளதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக எண்ணெய் விநியோகத்தை அதிகம் சார்ந்துள்ள பல நாடுகள் மாற்று வழிகள், சேமிப்பு வாய்ப்புகள் மற்றும் விலை நிலைத்தன்மையை உறுதி செய்ய அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், உலக எண்ணெய் வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தைகளின் முதுகெலும்பாக கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பிரச்னைகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.

நீண்ட காலமாக ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனால், தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா – ஈரான் மோதலால், இந்த கடல் வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஜலசந்தியில் சீரான கப்பல் போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளதால், பயண செலவுகள் அதிகரித்து, அச்சமும், உறுதியற்ற சூழலும் உருவாகியுள்ளது. இதன் விளைவாக எண்ணெய் விலை 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதால், இயற்கை எரிவாயு விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. இதனால், ஜலசந்தியை முழுமையாக மூடாமல், ஈரான் தனது நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே கப்பல்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.

அனுமதி இல்லாமல் கடக்க முயன்ற 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இந்த மாதத்தில் இதுவரை மொத்தம் 138 கப்பல்கள் பாதுகாப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றுள்ள நிலையில், இது வழக்கமான அளவைவிட 95 சதவீதம் குறைவு என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், தற்போது சுமார் 2 ஆயிரம் கப்பல்கள் ஈரானின் அனுமதிக்காக அப்பகுதியில் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடக்க குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்குகிறது. குறிப்பாக, சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் பெரும்பாலும் அனுமதி பெறுகின்றன. மேலும் சில கப்பல்கள் தங்களை சீனாவுடன் தொடர்புடையதாகக் காட்டி அனுமதி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா நோக்கிச் செல்லும் சில கப்பல்களும் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து சென்றுள்ள நிலையில், பல இந்திய கப்பல்கள் இன்னும் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

அதேபோல, ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க விரும்பும் கப்பல்கள் முதலில் ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய இடைத்தரகர்களை அணுக வேண்டும். பின்னர், கப்பலின் விவரங்கள், சரக்கு, பயண திசை, பணியாளர்கள் போன்ற தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன.

அனுமதி கிடைத்தால், குறிப்பிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் கப்பல்கள் வழி நடத்தப்படுகின்றன. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு கப்பல் கடப்பதற்கு சுமார் 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 18 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக காப்பீட்டு கட்டணங்ளும் அதிகரித்து, ஒரு பயணத்தின் செலவு பல மில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், ஈரான் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக வரும் தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளது.

மொத்தத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருப்பது போல் தோன்றினாலும், அதிக அபாயங்கள், உயர்ந்த செலவுகள் மற்றும் அரசியல் கட்டுப்பாடுகள் காரணமாக, உலக வர்த்தகத்திற்கான முக்கிய பாதை தற்போது மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது.

Tags: iran attack uaeglobal oil tradeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iraniran attacks dubaiiran attack israelus israel iran attackisrael iran attackiran attacks us basesiran attackiran us bases attackiran attacksStrait of Hormuz
ShareTweetSendShare
Previous Post

மதுரை : அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

Next Post

மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியை வெற்றிகரமாக கடப்போம் – பிரதமர் மோடி

Related News

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies