தொகுதி மறுவரையறை விவகாரத்தில், நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்தும் ரீல்ஸ் கட்சியை மக்கள் நம்பமாட்டார்கள் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation என்ற நாடகம் ஆடுவது ஏன் என காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
தங்கள் Proxy அரசை வைத்து எம்பிக்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் 4 மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? என வினவியுள்ளார்.
தொகுதி மறுவரையறையை ஆதரித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை கேள்வி கேட்கத் காங்கிரஸுக்கு துணிச்சல் உள்ளதாக என தயாநிதி மாறம் விமர்சித்துள்ளார்.
தவெக அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன? என்றும்,
Fair Delimitation என்ற நிலைப்பாட்டிலிருந்து No Delimitation என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது Petty Politics அன்றி வேறல்ல என்று கூறியுள்ளார்.
நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள் என கடுமையாக சாடியுள்ளார்.
















