சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்திய மக்களுக்கு இதயப்பூர்வமான சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தேசப்பற்றை வளர்க்கவும், தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாடு முழுவதும் மூவர்ணக் கொடி பேரணிகள் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மூவர்ணக்கொடியை ஏந்தி வாழ்த்து தெரிவித்துள்ள விண்வெளி வீரர்கள், இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக்கொடி பூமியின் எல்லைகளைக் கடந்து விண்வெளியிலும் இந்தியர்களை ஒன்றிணைக்கும் பெருமையின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளனர். விண்வெளியில் இருந்து இந்தியர்களுக்கு தெரிவிக்கப்பட்ட இந்த சிறப்பு வாழ்த்து, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
















