தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை இருப்பது தொடர்பான வழக்கில் நிலத்தை ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
கண்டியூரில் உள்ள பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயிலின் அருகே உள்ள ஈவெரா சிலையை அகற்றக் கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், கோயிலின் அருகே உள்ள இந்த சிலையில் கடவுள் நம்பிக்கைக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளதால் பக்தர்களின் உணர்வு அவமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, கோயிலுக்கு சொந்தமான நிலத்தில்தான் சிலை நிறுவப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியதோடு கோயில் நிலம் எவ்வளவு, சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக அளந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு ஆணையிட்டது.
















