தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளதாக பாஜக எம்எல்ஏ போஜராஜன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய கீதம், வந்தே மாதரம், மாநில பாடல் மூன்றுமே ஒவ்வொன்றோடு பிரிக்க முடியாதவை என தெரிவித்தார்.
மூன்றில் எல்லாமே முக்கியம் தான்; மூன்றும் நமது உயிரினும் கலந்தது என்றும் அவர் கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்தை எப்படி நிராகரிக்க முடியும்? என்றும், மூன்றில் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்றும் கூறினார்.
















