தமிழ்மொழி மீதான தவறான விமர்சனத்திற்கு அமைச்சர் மரியவில்சன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், தனது மதம் தனக்கு கற்றுக் கொடுத்ததை, எந்த தமிழ் பாடத்தாலும் கற்றுக்கொடுக்க முடியாது என சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நம் தமிழ்மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா என வினவியுள்ளார்.
அமைச்சர் மரியவில்சன் தனது மொழியாற்றல் மீதான விவாதத்தில் மதத்தோடு தமிழ்மொழியை ஒப்பிட்டு தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பிறப்பால் மரியவில்சன் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.
மேலும், அமைச்சர் மரியவில்சன் தமிழ்மொழியை தாழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென கண்டனம் தெரிவித்துள்ளார்.
உணர்ச்சி மிகுதியால் தமிழ்மொழி மீதான தவறான விமர்சனத்திற்கு அமைச்சர் மரியவில்சன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்,
















