காவிரிநீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
காவிரிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முன்னதாக, இன்று காலை காவிரிநீர் ஒழுங்காற்று குழு கூட்டமும் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரிநீர் திறப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 88 டிஎம்சி திறக்க வேண்டியதற்கு பதிலாக கர்நடாகா இதுவரை 10 டிஎம்சி மட்டுமே திறந்துள்ளது. இதனால், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
















