கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்க அதிர்வுகள் வெனிசுலாவிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
















