பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள கோயில்களுக்கு அறங்காவர்களை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில், திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார்
ஆண்டு வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள திருக்கோயில்களுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்யும் வகையில்,
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து, பெயர்பட்டியல் தயாரித்து அளிக்க குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
குழுவின் தலைவராக, மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகளும்,
துணைத்தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ராமநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு உறுப்பினர்களில் ஒருவராக திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் இடம்பெற்றுள்ளார்.
















