காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 139-வது கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். நடப்பு ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டிஎம்சி நீர் திறக்க வேண்டிய நிலையில், இதுவரை 10 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. தொடர்ந்து நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது.
















