கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் கொசு மருந்து அடித்ததால் 2 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர் உப்பு தோட்டம் பகுதியில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டதால், பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது, மோகன், ராணி என்ற இருவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அளவுக்கதிகமாக மருந்து கலந்து கொசு மருந்து அடித்ததே உயிரிழப்பிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















