காஞ்சிபுரம் அருகே, பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவன தொழிலாளர்கள், தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்வல்லூர் கிராமத்தில் செயல்படும் தொழிற்சாலையில் சுமார் 2 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊக்கத்தொகை வழங்கக்கோரி, சிஐடியு தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
இதனால், அந்நிறுவனம், 97 நிரந்தர ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதையடுத்து மேற்கொண்ட முயற்சி பலனளிக்காத நிலையில், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், நான்கு பேர் தொழிற்சாலையின் மேல்கூரையின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.
















