பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ஏர்போர்ட் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏழாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பட்டியலின மக்களுக்கான நிதியை மாநில அரசு திருப்பி அனுப்பி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த நிதியில் தான் மகளிருக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
















