அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவையை உருவாக்க நடவடிக்கை
கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
விவசாய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை
மேகதாது அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்பட்டு தமிழக உரிமை பாதுகாக்கப்படும்
குடியிருப்புகளுக்கு மாதம் ஒருமுறை மின் கணக்கீடு மற்றும் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்
திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை
ஜெயலலிதா போராடிப் பெற்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி முல்லைப்பெரியாற்றில் 152 அடிக்கு நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்
நடைமுறைக்கு சாத்தியமுள்ள புதிய மதுக் கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















