கிருஷ்ணகிரியில் அருகே ராம நவமியையொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு ரோஜா மலர் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஒசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சீதா சமேத ஸ்ரீ ராமர் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 32 அடி உயரம் கொண்ட ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு ரோஜா மலர்களால் அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















