நெல்லையில் கட்டிட தொழிலாளி ஒருவர் முன்பகை காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் வழக்கம் போல பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு வந்த மணி என்பவர் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
கொலை செய்த மணி என்பவர் கஞ்சா வியாபாரி எனவும் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
















