மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
மேலும், தற்போதைய மம்தா பானர்ஜி அரசு எல்லை பாதுகாப்பு பணிகளுக்கு தேவையான நிலங்களை ஒதுக்காமல், ஊடுருவல்களுக்கு வழிவகுப்பதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார்.
அத்துடன், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
















