அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 53 வயது முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு சென்னை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முதியவர் மீதான குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
அதனடிப்படையில், முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
















