திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடந்த ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் முக்கிய விழாவான பங்குனி உத்திர பெருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்ரமணியர் தேர், வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதனை தொடர்ந்து, காலை 9.05 மணிக்கு ஆழித்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















