திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தில் வசித்து வந்த 10 பயனாளிகளின் வீடுகளை அகற்ற அதிகாரிகள் வந்தபோது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, 10 பயனாளிகளுக்கும் ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் அவகாசம் வழங்கினர்.
இதனை அடுத்து, 10 பயனாளிகளின் வீடுகளுக்கும் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
















