தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி, கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர்க்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் மனோகரன், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதரை நேரில் சந்தித்து மனு அளித்தார். குன்னூர் பகுதியில் கோவில் திருவிழாக்களுக்கு விதிக்கப்படும் நேரக் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
















