கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்ற வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூரிய பிரகாஷ், சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளபோது, மாற்றுக் கட்சியில் இருந்து வந்த ஸ்ரீநிதி நாயுடுக்கு சிங்காநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
அதேபோன்று 27 வயதான சூரிய பிரகாசுக்கு கவுண்டம்பாளையம் தொகுதி ஒதுக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை காமராஜ் பவன் அலுவலகம் முன்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பண மாலை அணிவித்த புகைப்படத்துடன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ சீட்டை விற்காதே, வேட்பாளரை மாற்று என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
















