பதவி என்பது தனக்கு இரண்டாவது பட்சம்தான் எனவும், மக்களின் விருப்பத்திற்காகவே போட்டியிடுவதாகவும் விளவங்கோடு பாஜக வேட்பாளர் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
மார்த்தாண்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பொறுப்பையும் எதிர்பார்க்காமல் காத்திருந்ததாகவும் கூறினார். தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
















