அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவதா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்ற வார்த்தை பயன்படுத்துவது சலிப்பூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்பதா? என முதலமைச்சர் ஸ்டாலிக்கு கேள்வி எழுப்பியுள்ள அவர், கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்வதால் தமிழ் பலவீனமடைவதில்லை எனவும், கூடுதல் மொழியை கற்போர் தன்னம்பிக்கை பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்தை மதித்து அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ள தர்மேந்திர பிரதான் , அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்தும் முயற்சியில் இணைவது அவசியமான ஒன்று எனவும் வலியுறுத்தி உள்ளார்.
















