தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவல்லாவில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களவை மற்றும் பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவேற்றியுள்ளதாகவும், அதன் பலன்களை பெண்கள் பெற வேண்டும் என்பதால் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் எனவும் தெரிவித்தார்.
மேலும், தென்மாநிலங்களின் மக்களவை தொகுதிகள் இழக்கப்படாமல் இருப்பதை நாடாளுமன்றத்தில் உறுதி செய்யவே கூட்டத்தொடரின் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படும் என்பது வீண் வதந்தி என்றும் தெளிவுபடுத்தினார்.
















