தமிழகத்தில் சமூக சீர்கேட்டைத் தடுக்கவும், ஊழல் ஆட்சியை அகற்றவும் மக்கள் தயாராகிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, திமுகவின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை திமுக அரசு உருவாக்கியுள்ளதாகவும் விமர்சித்தார். இந்த கூட்டத்தில் அதிமுக, பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதி கட்சி உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
















