கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனிபி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? என மதுரை மத்திய தொகுதி என்டிஏ வேட்பாளரும், இயக்குநருமான சுந்தர் சி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் என்டிஏ தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பழனிவேல் தியாகராஜனுக்கு 2 முறை வாக்களித்த மக்கள் 3 -வது முறை ஏமாற தயாராக இல்லை என்றார்.
அவரைப் போல் வெளிநாடுகளில் படித்தவன் அல்ல என்றும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் மக்கள் பிரச்னை என்ன என்று தெரியும் அறிந்தவன் என்றும் அவர் கூறினார்.
பரப்புரைக்கு செல்லும் போது மக்கள் அளிக்கும் ஆதரவு திமுக மீதான அதிருப்தியை காட்டுவதாகவும் சுந்தர் ஜி குறிப்பிட்டார்.
















