அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டுமென, தமிழக டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் டிஜிபி பிறப்பித்த உத்தரவில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
பணிமூப்பு அடிப்படையில் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நேரடி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டுமென கூறினார். பிற அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை சில எஸ்.பி.க்கள் பின்பற்றுவதாக தகவல் வருவதாகத் தெரிவித்த டிஜிபி, அவ்வாறு அதிகார வரம்பை மீறி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தால் அதுகுறித்து தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கூறினார்.
















