கன்னியாகுமரி மக்களின் 25 ஆண்டு கோரிக்கையான கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என கிள்ளியூர் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நிவின் சைமன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிவின் சைமன், கருங்கல் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர், தமிழ் ஜனத்திற்கு பேட்டியளித்த அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் கடலை சார்ந்து தொழில் செய்து வருகின்றனர் என்றும், ஆண்டுதோறும் கடல் சீற்றம், விபத்து காரணமாக 25 மீனவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
விபத்துகளை தடுக்க கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இன்னும் ஆறு மாதங்களுக்குள் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
















