பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல் மும்பையில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே வயது முதிர்வு காரணமாக காலமானார்.
மும்பையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு செலுத்தினர். பின்னர் ஆஷா போஸ்லேவின் உடல் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவிற்கு வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி எடுக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து பாடகி ஆஷா போஸ்லே உடல் தகனம் செய்யப்பட்டது.
















