அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் - வேதனையில் உள்ளூர்!
Sep 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் – வேதனையில் உள்ளூர்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 07:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரும் சுற்றுலாத் தளமாகத் திகழ்ந்த கொடைக்கானல் தற்போது போதைக் காளான்களை விரும்புவோருக்கான சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களில் விளையும் போதை காளான்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் விரும்பி வரும் சுற்றுத்தளமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தளமாக விளங்கும் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் கொடைக்கானல் பகுதியின் மேல்மலை கிராமங்களில் உள்ள புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் விளையும் மேஜிக் மஸ்ரூம் என அழைக்கப்படும் போதைக் காளான்கள் எதிர்கால இளைய சமுதாயத்தைச் சீரழித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. கொடைக்கானலில் மட்டுமே கிடைக்கும் இவ்வகை போதை காளான்களை வாங்குவதற்காகவே கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் அதிகளவில் வருவதும் தெரியவந்துள்ளது.

உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போதைக் காளான்களை விரும்பி உண்ணுவதை வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி, கிளாவரை ஆகிய கிராமங்களில் விளையும் போதை காளான்களோடு, கொடியவகை போதைப் பொருட்களும் தாராளமாகப் புழங்கி வரும் நிலையில் அது தொடர்பாகப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில் போதை காளான்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி, மூளையை முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கி வந்த கொடைக்கானல் தற்போது போதைப் பொருட்களுக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக மாறி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத் தளத்தின் நற்பெயரோடு இளைஞர்களின் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் போதை காளான்கள் உற்பத்தியை அடியோடு ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Tags: Increasing circulation of intoxicating mushrooms: Youths targeting Kodaikanal - Locals in agonyஅதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் “விக்ரம்-1” : விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைத்த இந்தியா…!

Next Post

பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு – கடும் சீற்றத்தில் மக்கள்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies