சமூக வலைதளங்களை பயன்படுத்த 16 வயதுக்கு உட்பட்டோருக்கு தடை : உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஆஸி., அரசின் புதிய சட்டம் பலன் தருமா?
Jan 14, 2026, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சமூக வலைதளங்களை பயன்படுத்த 16 வயதுக்கு உட்பட்டோருக்கு தடை : உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஆஸி., அரசின் புதிய சட்டம் பலன் தருமா?

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் முதல் ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ள ஆஸ்திரேலியா, இதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்…

உலகளவில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்றான ஆஸ்திரேலியா, அந்நாட்டில் உள்ள 16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக வலைதள தடையை அமல்படுத்தியிருக்கிறது. உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளில் இது போன்ற தடையை நடைமுறைக்குக் கொண்டு வருவது இதுவே முதல் முறை. அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும், தங்கள் தளத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் வைத்துள்ள கணக்குகளை முடக்குவதுடன், புதிய கணக்குகளை அவர்கள் தொடங்காமல் கண்காணிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை மீறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 4 கோடியே 95 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள 28 லட்சம் இளம் பயனாளர்கள் TIK TOK, INSTAGRAM, YOUTUBE, REDDIT, TWITCH போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்

. அதே நேரத்தில் MESSAGING, ஆன்லைன் விளையாட்டு, கல்வி, மருத்துவ சேவைகள் போன்ற நோக்கத்துக்கான தளங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக WHATSAPP, PINTEREST, ROBLOX போன்ற சில செயலிகள் இதற்குள் உட்படுத்தப்படவில்லை. 16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக வலைதள தடை அமலுக்கு வந்துள்ள போதிலும், பயனர்களின் வயது சரிபார்ப்பு எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பது இன்னும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இருப்பினும், முகத்தினை ஸ்கேன் செய்வது, வங்கி மற்றும் மொபைல் சேவை தகவல்களை வைத்து வயதை உறுதி செய்வது போன்ற முறைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது. அதே நேரத்தில், YOUTUBE நிறுவனம் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, தேவையான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு விதித்துள்ள தடை ஒருபுறமிருக்க மற்றொருபுறம், பல இளைய தலைமுறையினர் இந்தத் தடையை மீறுவதற்கான வழிகளை தேட தொடங்கிவிட்டதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக VPN செயலியைப் பயன்படுத்துவது, பதிவு செய்யும்போது வயதைப் பொய்யாகக் குறிப்பிடுவது, பெற்றோரின் செல்போன் எண்ணைப் பயன்படுத்துவது போன்ற பல சூழ்ச்சியான வழிமுறைகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் மேலாக, தனது தாயின் முகத்தை கேமரா முன் காட்டி வயதை சரிபார்த்து SNAP CHAT-ல் மீண்டும் நுழைந்ததாகக் கூறிய 13 வயது சிறுமியின் வீடியோ பல்வேறு தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், அந்தச் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுப் பல்வேறு செய்தி நிறுவனங்கள் ஆஸ்திரேலிய அரசை அலர்ட் செய்து வருகின்றன. இளைய தலைமுறையினரின் இந்தச் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு பல பெற்றோரும், “அரசின் இந்தத் தடையால் எதுவும் மாறாது, பிள்ளைகள் பல்வேறு வழிகளை இதற்காகக் கண்டுபிடித்துக்கொள்வார்கள்” எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேபோல, ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராகக் கருத்து பகிர்ந்துள்ள REDDIT உள்ளிட்ட சில நிறுவனங்கள், “அரசின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என விமர்சித்துள்ளன. ஆனால், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸோ, “இளம் வயதினர் சமூக வலைதளங்களுக்குள் மூழ்கி கிடப்பதில் இருந்து விடுபட இது உதவும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், ஆஸ்திரேலிய அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பிற நாடுகளும், எதிர்காலத்தில் இதுபோன்ற தடைகளை ஏற்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன், ஃபிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகள் வயது வரம்பு மற்றும் பெற்றோர் அனுமதி தொடர்பான விதிகளை ஏற்கனவே நிறைவேற்றியுள்ள நிலையில், மலேசியா போன்ற சில நாடுகள் அடுத்த ஆண்டு முதல் ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ள இதே சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக பல ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு உண்மையில் அதற்கான பலனை தருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Tags: NEWS TODAYtoday newsBan on social media use by those under 16: Will the Australian government's new lawwhich has attracted global attentionbe effective?
ShareTweetSendShare
Previous Post

ஜிகாதி அசிம் முனீரின் சீண்டல் : இந்தியாவிற்கு எதிராக மீண்டும் விஷமப் பேச்சு!

Next Post

கடல்நீரில் இருந்து குடிநீர், பசுமை ஹைட்ரஜன் உருவாக்கம் : புதிய தொழிற்சாலையை திறந்து உலகின் கவனத்தை ஈர்த்த சீனா…!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies