50 ஆண்டுகளாக தொடரும் நாட்டிய கலை பயணம் : இளைய தலைமுறைக்கு பரத நாட்டியத்தை கற்றுத் தருவதே நோக்கம்!
Jul 29, 2026, 08:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

50 ஆண்டுகளாக தொடரும் நாட்டிய கலை பயணம் : இளைய தலைமுறைக்கு பரத நாட்டியத்தை கற்றுத் தருவதே நோக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்கழி மாதத்தில் நாட்டிய விழாக்களில் ஒருபகுதியாகச் சென்னை மியூசிக் அகாடமியில் ஜனவரி 3-ஆம் தேதி நாட்டிய சங்கல்பா நடனப் பள்ளி சார்பில் காருண்ய காவ்யா நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. இந்தத் தருணத்தில் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவரும், பரத நாட்டிய கலைஞருமான ஊர்மிளா சத்ய நாராயணனின் கலைப் பயணம்பற்றிப் பார்ப்போம்.

பரதம் என்பது ஒரு வாழ்க்கை முறை, நடனம் இல்லாமல் என் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கவே முடியாது என்கிறார் பரதநாட்டிய கலைஞரான ஊர்மிளா சத்ய நாராயணன். அந்தளவுக்கு பரதம் என்பது தன் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவே மாறிவிட்டது என்கிறார் அமைதியான குரலில். குடியரசுத் தலைவரின் கைகளால், சங்கீத நாடக அகாடமி விருதுப் பெற்றவர், கலைமாமணி விருதுக்கு அழகு சேர்த்தவர் என்று பரத நாட்டியத்திற்கு அவர் ஆற்றிய பங்கைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரத நாட்டியத்தில் சாதித்து வரும் ஊர்மிளா சத்ய நாராயணன், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரதத்தை கொண்டு சேர்த்தவர்… புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரான இவர், கலை வடிவத்திற்கு தனித்துவமான, முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றும் நோக்கில் நாட்டிய சங்கல்பா என்ற பெயரில் 30 ஆண்டுகளாக நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார். தனது நாட்டியம் அரங்கேற்றமாகி 50 ஆண்டுகளைத் தொட்டுவிட்டதை எண்ணி பெருமிதமும் கொள்கிறார்.

இந்தச் சிறப்பான சூழலில், அவரது நாட்டியப் பள்ளி சார்பில், சென்னை மியூசிக் அகாடமியில் ஜனவரி 3ம் தேதி காருண்ய காவ்யா என்ற நாட்டிய நாடக அரங்கேற்றம் நடைபெறவுள்ளது… இந்த நிகழ்ச்சிக்கு, இசையமைப்பாளர் எம்பார் கண்ணன் இசையமைக்கிறார். இதற்காகச் சுமார் 60 பரத நாட்டிய கலைஞர்கள் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

பரத நாட்டியத்தை ஒரு பெருங்கடல் என வர்ணிக்கும் அவர், அதில் தாம் சிறுதுளியே என்கிறார். நடனம் மட்டுமல்லாமல், நடனக் கோட்பாடு, கர்நாடக இசை, யோகா ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களை உருவாக்குவதே தனது குறிக்கோள் என்றும் கூறுகிறார். ஆண்டாள் நாச்சியாரை நினைவுகூரும் மார்கழி தமிழ்நாட்டிற்கே திருவிழா போன்றது என்று கூறும் அவர், மார்கழி மாதம் கலைஞர்களுக்கு அங்கீகாரமும், ஊக்கமும் தரும் மாதம் என்கிறார் உற்சாகமாக…. சென்னை மியூசிக் அகாடமியால் பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய நடன கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க நிருத்ய கலாநிதி விருது ஊர்மிளா சத்ய நாராயணனுக்கு வழங்கப்பட உள்ளது.

இதனை தாழ்மையுடனும், நன்றியோடும் ஏற்றுக் கொள்வதாகக் கூறும் ஊர்மிளா சத்ய நாராயணன், பரத நாட்டியத்தை இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும், ரசிக்க வேண்டும், என்பதுதான் தனது இலக்கு என்கிறார்…. 50 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டே இருக்கும் ஊர்மிளா சத்ய நாராயணனின் நாட்டிய பாதச்சுவடுகள் பரத நாட்டியக் கலையின் உயிரோட்டம் என்றே கூறலாம்.

Tags: A journey of dance art that has continued for 50 years: The aim is to teach Bharatanatyam to the younger generationநாட்டிய கலை பயணம்இளைய தலைமுறை
ShareTweetSendShare
Previous Post

Epstein Files-ல் ட்ரம்ப் புகைப்படம் மாயம் : அதிர்ச்சி தரும் எப்ஸ்டீனின் அரச குடும்ப தொடர்புகள்!

Next Post

பொய் புகாரால் பலியான இந்து இளைஞர் – விசாரணையில் பகீர் தகவல்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies