supreme court - Tamil Janam TV

Tag: supreme court

கச்சத்தீவு வழக்கு – டி.ஆர்.பாலுவும் மனுதாரராக சேர்ப்பு!

கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவையும் மனுதாரராக சேர்த்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தது. கச்சத்தீவை மீட்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், ...

கச்சத்தீவை மீட்கக் கோரும் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கு 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ...

ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு – 10 நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜாமினை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 10 நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் ...

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை விவகாரம் – தேசிய அளவில் குழு அமைப்பு

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க தேசிய அளவிலான செயற்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து ...

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவு – உச்ச நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல் முறையீடு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் ...

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் கோப்புகளை இரண்டு வாரங்களில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆளுநரிடம் வழங்கவும், அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு அனுமதி ...

மஞ்சோலை எஸ்டேட் வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

மஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இது குறித்து மாஞ்சோலையை ...

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்

சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தஷ்வந்த் தொடர்ந்த மனு மீதான விசாரணையை, ...

தமிழகத்தில் போலி சாதி சான்றிதழ் : உச்சநீதிமன்றம் அதிருப்தி!

தமிழகத்தில் சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பட்டியலினத்தின் ஒரு பிரிவான ஹிந்து கொண்டா ரெட்டி சாதி சான்றிதழ் ...

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணை – உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

சீமான் மீதான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 12 வாரங்களில் விசாரித்து ...

சிலை கடத்தல் கோப்புகள் மாயம் : அரசுக்கு ஆணை!

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஏப்ரல் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுளளது. சிலை ...

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் கைது செய்ய ஜிஎஸ்டி, சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய ஜிஎஸ்டி மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜிஎஸ்டி சட்டம் ...

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு ...

மசோதாக்கள் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு!

ஆளுநர் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் உள்ளதாக கூறி, ...

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் ...

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க  தமிழக அரசு  கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் ...

ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு!

உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில், தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் பல்கலைகழக மசோதாக்களுக்கு ஒப்புதல் ...

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கடும் மாசை ஏற்படுத்தும் ...

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து தகராறு விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டு, ...

முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது : உச்ச நீதிமன்றம்!

முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இருமடங்கு வயதிலும் உறுதியாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு வெளியானது என தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி ...

வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் தடை – அண்ணாமலை வரவேற்பு!

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்த, உச்ச நீதிமன்றம் ஆணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு நடத்தக்கோரிய மனு : உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு !

வயநாடு பேரிடரை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு அணையின் நீரின் அளவை குறைக்க கோரியும், நிபுணர் குழு மூலம் அணையை மறுஆய்வு நடத்தக்கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ...

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை!

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா என்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ...

Page 1 of 7 1 2 7